நாடு முழுவதும் மருத்துவம், என்ஜினியரிங் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு – மத்திய அரசு பரிசீலனை!
தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுவது போல மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை வழங்க ஜே.இ.இ தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. இந்நிலையில் இந்த நுழைவு தேர்வுகளை கியூட் என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுடன் இணைக்க இருப்பதாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
கியூட் தேர்வு:
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அதே போல மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களிலும் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நீட், ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகளை கியூட் என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு டன் (இளநிலை) இணைக்க இருப்பதாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வை அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் நீட், ஜே.இ.இ.(மெயின்), கியூட் போன்ற தேர்வுகளும் என்.டி.ஏ. என அழைக்கப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
சென்னை: ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.192 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கூறுகையில், 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 90 பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கு கியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு இந்த தேர்வினை 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத இருக்கின்றனர். 2020 ஆம் ஆண்டின் தேசிய கல்வி கொள்கையும் ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்ற அம்சத்தை கொண்டுள்ளது. இந்த திட்டமானது உயர்கல்வி படிக்க வெவ்வேறு தேர்வுகளை எழுதும் சுமையை குறைகிறது.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே நீட் தேர்வுக்கு உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களும், ஜே.இ.இ.மெயின் தேர்வுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களும் இருக்கின்றன. இந்த பாடத்திட்டங்கள் அனைத்தும் கியூட் தேர்வில் இருப்பதால் அதனால் மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் ஆலோசனை செய்ய தொடங்கி இருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு ஏதுவாக ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வானது மேல்நிலை வகுப்பு தேர்வுகள் முடிந்ததும் முதல் அமர்வு தேர்வும், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் இரண்டாவது அமர்வு தேர்வுகளும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.