சென்னை: ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.192 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாகவே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்து உள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
உலகம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்து வருகிறது. அதாவது, நாட்டில் பங்குச்சந்தை நிலவரம் சரிவடைவதால் தான் தங்கத்தின் விலை திடீரென உயர்வதும், அதிரடியாய் குறைந்தும் வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் பெண்கள் எதிர்காலத்தின் தேவைக்காக தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். தற்போதெல்லாம், வங்கிகளில் பணம் சேமிப்பதை காட்டிலும் இது போன்ற ஆபரண தங்கத்தில் முதலீடு செய்வதை தான் விரும்புகின்றனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே தான் இருந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,890க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.00க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, சென்னையில் இன்று அதிரடியாய் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதாவது, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,312 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.4,914 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80 காசு உயர்ந்து ரூ.64.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் கிலோவிற்கு ரூ.64,800 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை இப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.