தமிழகத்தில் நாளை (ஆக.13) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு லிஸ்ட் இதோ!
விருதுநகர் மாவட்டம் தொட்டியம்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் இல்லாமல் எவ்வித வேலைகளையும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் கிராம பகுதிகளில் மின் வசதி குறைவாக இருக்கும் ஆனால் தற்போது அனைவருக்கும் மின் தேவை அவசியமாக உள்ளதால் அனைவருமே மின் இணைப்பு பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு மின் தேவை அதிகமாக உள்ளது. இத்தகைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை மக்களுக்கு தடையில்லாமல் வழங்க வேண்டியது அவசியம். அதனால் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியம்பட்டி மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் நடைபெற உள்ளதால் புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காப்பேரி, கலங்காேபரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், இஎஸ்ஐ காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்டமலை, வேப்பங்குளம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!
அதே போல உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாசலபுரம், மேலான்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஆகஸ்ட் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.