தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்கும் ஒரு சில பகுதிகளில் கனமழையும், மற்ற சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது மற்றும் வட மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதே போல நாளையும், நாளை மறுநாளும் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்குமே தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் – முதல்வர் அறிவிப்பு!
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27-28 டிகிரி செல்ஸியஸ் அளவு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரைக்கும் காற்று வீசும் எனவும், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.