தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Data Entry Operator வேலை – முழு விவரங்களுடன்!
தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Cum Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- செங்கல்பட்டு மாவட்டம் சமூக பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில் Assistant Cum Data Entry Operator பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதி குழுமத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Assistant Cum Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு செய்வதில் முதுநிலை சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
- கணினி உபயோகம் செய்வதில் குறைந்தபட்சம் 1 வருடம் வரை அனுபவ உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 40 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
- Assistant Cum Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- மாத ஊதியமாக தரப்படும்.
- இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.