முதல்வர் ஸ்டாலினை பார்க்க வந்த நபர், அனுப்பி வைத்த போலீசார் – வெளியான வீடியோ!
முதல்வர் தனியார் மருத்துவமனையில் கொரோனா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சமயத்தில் முதல்வரை பார்க்க வந்த அமைச்சரை போலீசார் திருப்பியனுப்பியுள்ளனர். மேலும், நிர்வாகிகள் யாரும் நலம் விசாரிக்க வர வேண்டாம் எனவும் முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.
முதல்வரின் அறிவிப்பு :
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால், தமிழகம் முழுக்க உள்ள அனைத்து மாவட்டங்களிலுமே கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சென்னையில் தான் தினமும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் கட்டாயமாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, முதல்வருக்கு லேசான உடல் சோர்வு இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அந்த பரிசோதனையில் முதல்வருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர், கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்ததுமே மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டேன் எனவும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு மட்டுமல்லாமல் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என பதிவு ஒன்றை வெளியிட்டுருந்தார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான புதிய வசதி – அறிவிப்பு வெளியீடு!
பின்னர், முதல்வரை பார்க்க குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முதல்வரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, போலீசார் முதல்வரை பார்க்க விடாமல் அமைச்சரை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனிடையே, நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு என்னை பார்க்க வர வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.