தமிழகத்தின் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இன்றும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் – அரசு முடிவு!
அத்துடன் நகரில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Exams Daily Mobile App Download
இதே போல் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக வருகிற ஜூலை 10, ஜூலை 11, ஜூலை 13ம் ஆகிய தேதிகளில் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது