தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் 13 ஆயிரத்து 391 தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நியமனம்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த பணி நியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாக குழுவே மேற்கொள்ளலாம் என்றும் கூடுதலாக தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திருத்திய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டார். அதில், திறன் உள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு முக்கிய முடிவு!
அதேபோல் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி இல்லை என்றால் உடனே பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது இன்று முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.