புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்கள்!
புதிதாக திருமணமானவர்கள் மற்றும் குடும்பத்தில் புதிதாக குழந்தை பிறந்தாலும் கண்டிப்பாக ரேஷன் கார்டில் அவர்களின் பெயரை இணைக்க வேண்டும். தற்போது எப்படி புதிய ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் அரசின் தரப்பில் இருந்து ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. ரேஷன் கார்டு கிடைப்பதற்கு கண்டிப்பாக ஆதார் கார்டு, இருப்பிட சான்று மற்றும் அடையாள சான்று தேவை. ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர் மூன்று மாதங்களுக்கு முன்பு வாங்கிய சிலிண்டர் பில்லையும் கட்டாயமாக வழங்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் ரேஷன் கார்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். மேலும், குடும்பத்தில் புதிதாக குழந்தை பிறந்தாலும் அக்குழந்தையின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்த்து விட வேண்டும். ரேஷன் கார்டில் உள்ள நபர் இறந்து விட்டாலும் கண்டிப்பாக உறுப்பினரின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். பொதுவாக குடும்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தனி நபருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. ஆனால், 55 வயதிற்கு மேற்பட்ட தனிநபருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
ராதிகாவின் அண்ணனாக என்ட்ரி கொடுக்கும் ‘பாவம் கணேஷன்’ சீரியல் நடிகர் – ரசிகர்கள் ஷாக்!
மேலும், புதிதாக திருமணமான ஆணும் பெண்ணும் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் உள்ள பெயர்களை நீக்கம் செய்துவிட்டு புதிய ரேஷன் கார்டை பதிவு செய்ய வேண்டும். புதிதாக திருமணமானவர்களுக்கு ரேஷன் கார்டில் பதிவு செய்ய திருமண அழைப்பிதழ் அல்லது திருமண சான்றிதழை வைத்து ரேஷன் கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்கு முன்பு கண்டிப்பாக சிலிண்டர் இணைப்பை வாங்கியிருக்க வேண்டும். அரசின் அனைத்து இ-சேவை மையங்களிலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களிலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அரசின் இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 60 வசூலிக்கப்படுகிறது மற்றும் தனியார் பொது சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 300 வரைக்கும் வசூலிக்கப்படுகிறது. ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் பெரும்பாலும் ஒப்புதல் கிடைத்துவிடும். அடுத்த 2 மாதங்களில் ரேஷன் அட்டை உங்களது கைக்கு வந்துவிடும்