தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தற்போதைக்கு 3 முதல் 4 சதவீதம் வரைக்கும் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இந்த கொரோனா பரவல் 10 சதவீதத்தைத் தாண்டும் போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரைக்கும் கொரோனா பரவல் எதுவும் இல்லாமல் மக்கள் சுதந்திரமாக பொது இடங்களில் நடமாடி வந்தனர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டுமே நாளொன்றிற்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கொரோனா பரவலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எதுவும் இல்லை என்றாலும் கூட தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
தினமும் தமிழகத்தில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து தான் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி புதிய கட்டுப்பாடுகளை தமிழகத்தில் விதிப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இனி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் டிஜிட்டல் பாடம் – பிரதமர் அறிவிப்பு!
மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கூடுதலாக மருத்துவமனைகளில் படுக்கைகளை தயார் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைக்கு தமிழகத்தில் கொரோனா 3 முதல் 4 சதவீதம் என்கிற அளவில் தான் இருந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் 10 சதவீதத்தைத் தாண்டும் போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியிருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ளும்படியும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக பொதுமக்கள் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.