TNPSC இல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 40+ காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு…!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Executive Officer Grade III பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சற்றுமுன் வெளியாகிய TNPSC அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில் (Advertisement No. 616, Notification No. 12/2022) Executive Officer Grade III (Code No. 1654) பணிக்கு என மொத்தமாக 42 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல் கீழே உள்ளது.
- Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையத்தில் Arts / Science / Commerce போன்ற பிரிவின் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
- 01.07.2022 அன்றைய தினத்தின் படி, Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 25 வயது பூர்த்தியடைந்தவராக இருப்பது அவசியம். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Executive Officer Grade III பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு Level-10 என்கிற அரசு ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.20,600/- முதல் அதிகபட்சம் ரூ.75,900/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.