இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமரின் முடிவு இது தான்!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்தியாவில் 4ம் அலையின் தாக்கம் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி தற்போது கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் தற்போது தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் நாட்டில் 4ம் அலை தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதையடுத்து மகாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – எப்படி படிக்க வேண்டும்? எளிய வழிகள் இதோ!
நாட்டில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 8000 ஐ தாண்டி பதிவாகிறது. அதனால் கொரோனா தினசரி பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் விரைவில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அத்துடன் கொரோனா பாதிப்பை குறைப்பது, தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் தொற்று அதிகம் பரவி வரும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.