TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – எப்படி படிக்க வேண்டும்? எளிய வழிகள் இதோ!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் எவ்வாறு படிக்கலாம் மற்றும் தேர்வு முறை மதிப்பெண்கள் குறித்த அனைத்து விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 & VAO:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவல,ர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு 2022 ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அரசுத்துறையில் ஆரம்ப நிலை பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதால் அதிக தேர்வர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 2 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது. இதனையடுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இத்தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டது. தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு வினாவிற்கு 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, இதில் 100 வினாக்கள் இடம்பெறும். தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும். அடுத்ததாக பொது அறிவு பகுதியில் 75 மதிப்பெண்களும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் 25 வினாக்களும் இடம் பெறும். தமிழில் 100 வினாக்களில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வெள்ளிக்கிழமைதோறும் விடுமுறை!
தமிழில் நல்ல மதிப்பெண் பெற 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். குறிப்பாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது நல்லது. அடுத்தாக கணித பாடத்தில் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். விகிதம், இலாபம்-நட்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் போன்ற பகுதிகளில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படும். இதற்கு 6-10 வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படித்தாலே 25 மதிப்பெண்களை நீங்கள் பெறலாம். பொது அறிவு பகுதியில் அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.