தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று (ஜூன் 13) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
கடந்த மே மாதம் 14ம் தேதி அளிக்கப்பட்ட கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 13) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்பு மாணவர்களுக்கும் இன்று முதல் பள்ளிகள் துவங்கி இருக்கிறது. இப்போது பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக தோரணம், வாழை மரங்களை கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வகுப்புகள் துவங்கிய முதல் வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புதிய கல்வியாண்டுக்கான பாட புத்தகங்களை அடுத்த 20 நாட்களுக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பு கல்வியாண்டு வகுப்புகள் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணியுடன் முடிவடைய இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட பாடவேளை அட்டவணையின் படி, 9.10 முதல் 9.30 மணிவரை இறை வணக்க கூட்டத்துடன் 9.30 மணிக்கு துவங்கும் முதல் பாடவேளைக்கு பிறகு மதியம் 12.20 மணியளவில் மதிய உணவு இடைவேளை விடப்படும்.
தொடர்ந்து மதியம் 1.00 மணிமுதல் 1.20 மணிவரை செய்தித்தாள் மற்றும் புத்தகம் வாசித்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மதியம் 1.20 மணிக்கு துவங்கும் ஐந்தாம் பாடவேளை மாலை 4.10 மணிக்கு எட்டாம் பாடவேளையுடன் முடிவடைய இருக்கிறது. இதை தொடர்ந்து, பள்ளிகளில் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல், வினாடிவினா, தொன்மை பாதுகாப்பு, நுகர்வோர், தகவல் தொழில் நுட்ப மன்றம், பேரிடர் மேலாண்மை, வாக்காளர் விழிப்புணர்வு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு, நுண்கலை மன்றம், திரைப்பட மன்றம், இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் என மன்றங்களை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் நாளை (ஜூன் 14) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அடுத்ததாக வாரத்தில் ஒரு நாள் மாணவர்களுக்கு நீதிபோதனை மற்றும் நூலகச் செயல்பாடுகளை நடத்த வேண்டும். பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும். மேலும் மாணவர்களுக்கு கூட்டு உடற்பயிற்சி நடத்தப்பட வேண்டும். இதனுடன் இலக்கிய மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 15 பேர் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். தவிர இந்த மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கவிமாமணி விருது வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.