விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து மொத்தமாக விலகிய அர்ச்சனா? ரசிகர்கள் ஷாக்!
ராஜா ராணி சீசன் 2 தொடரில் கடந்த இரண்டு வாரமாகவே அர்ச்சனா வரவில்லை. இதனால் சீரியலில் இருந்து அர்ச்சனா விலகிவிட்டார் என பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் அர்ச்சனா இணைவாரா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜா ராணி சீசன் 2:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன்2 தொடரில் கடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு தற்போதுதான் அனைத்து வெடிகுண்டுகளையும் எடுத்து சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஊர் மக்கள் அனைவரையும் காப்பாற்றியுள்ளனர். இதற்குப் பிறகு ராஜா ராணி தொடரில் அடுத்து என்ன சம்பவம் நடக்க இருக்கிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று வார காலமாகவே அர்ச்சனா சீரியலில் நடிக்கவில்லை. ஒருவேளை அர்ச்சனா ராஜா ராணி சீரியலில் இருந்து விலகி விட்டாரா என ரசிகர்கள் பலரும் வதந்திகளை பரப்ப துவங்கிவிட்டனர்.
Exams Daily Mobile App Download
தற்போது அர்ச்சனா ஸ்டைலாக ஹேர்கட் வேற செய்திருக்கிறார். அர்ச்சனா திரைப்படங்களில் எதுவும் நடிக்கிறாரோ, அதனால் தான் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகி இருப்பாரோ என ரசிகர்கள் கண்டபடி வதந்தியைக் கிளப்பி கொண்டிருக்கின்றனர். ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா தற்போது நடிக்கவில்லை என்றாலும் கூட அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அர்ச்சனாவிடம் ரசிகர்கள் தொடர்ந்து மீண்டும் எப்போது ராஜா ராணி சீரியலில் என்ட்ரி ஆக போகிறீர்கள் எனக் கேட்டபடி இருக்கின்றனர்.
மேலும், அர்ச்சனாவிற்கு பல திரைப்பட வாய்ப்புகள் வருவது உண்மைதான். திரைப்பட சூட்டிங் மற்றும் போட்டோ ஷூட்டிற்காக முழுக்க முழுக்க நேரத்தை செலவழிப்பதால் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனாவால் நடிக்க முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் அர்ச்சனா கண்டிப்பாக ராஜா-ராணி-சீரியலில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் அர்ச்சனா வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட அர்ச்சனாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் அர்ச்சனா மீண்டும் சீரியலில் எப்போது இணைவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.