பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய சுசித்ரா – இவருக்கு பதில் இனி இவர்தான்!
கோபியை மன்னித்து ராதிகா மீண்டும் கோபியை ஏற்றுக்கொள்வாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கியலக்ஷ்மி தொடரில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா சீரியலில் இருந்து விலக உள்ளதாகவும், இவருக்கு பதிலாக பிக்பாஸ் தாமரைச்செல்வி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் ராதிகா அறிந்து கொள்கிறார். இதற்கு பிறகும் ஏதேனும் பொய் சொல்லி மீண்டும் ராதிகாவுடன் கோபி சேர்ந்து வாழப் போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இத்தனை நாட்களாக ஒரே சமயத்தில் பாக்கியாவையும் ராதிகாவையும் சமாளித்து கொண்டிருந்த கோபி தற்போது ஒருவரை கூட சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
அதாவது கோபி எப்போது ராதிகாவின் வீட்டிற்கு சென்றாலும் உங்களது வீட்டிற்கு என்னை கூட்டிச் செல்லுங்கள் என கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருந்தார். இதனால் மனவேதனையில் கோபி தலைகால் புரியாமல் குடித்துவிட்டு தள்ளாடியபடியே ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். குடித்து விட்டு அமைதியாக இருக்காமல் பாக்கியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டி அனைத்து உண்மைகளையும் ராதிகாவிற்கு தெரிய வைக்கிறார். போதை தெளிந்ததும் கோபிக்கு ராதிகாவிடம் உளறியது எதுவும் கோபிக்கு சுத்தமாக ஞாபகமே இல்லை.
Exams Daily Mobile App Download
ராதிகாவிடம் உளறியது மட்டுமல்லாமல் போதையில் தள்ளாடியபடியே பாக்கியாவிடமும் சென்று ராதிகாவிடம் பேசுவதுபோல் அங்கும் உளறி கொட்டுகிறார். இதனால் பாக்கியாவிற்கும் கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பது புரிய வருகிறது. தற்போது, ராதிகாவிடம் கோபி தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா சீரியலில் இருந்து விலக உள்ளதாக அவரே லைவ் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இவருக்கு பதிலாக பாக்கியா கதாபாத்திரத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அறிமுகமான தாமரைச்செல்வி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.