NEFT, RTGS வாயிலாக பணப்பரிமாற்றம் செய்பவரா? கட்டண உயர்வு அமல்! முழு விபரம் இதோ!
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இந்த சேவைக்கு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
கட்டண உயர்வு:
இந்தியாவில் தற்போது அனைத்து பயன்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆன்லைன் வாயிலாகவே ஒருவருக்கு வீட்டில் இருந்தபடியே பணப்பரிமாற்றம் செய்ய முடிகிறது. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து வங்கிகளிலும் NEFT மற்றும் RTGS வாயிலாக பணப்பரிமாற்றம் செய்வதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா பரவல் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு வங்கிகளில் NEFT மற்றும் RTGS ஆகியவற்றின் சேவை கட்டணத்தை உயர்த்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி NEFT மற்றும் RTGS உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில், வங்கியில் RTGS வாயிலாக நேரடியாக ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றம் மேற்கொண்டால் சேவை கட்டணம் ரூ.24.50 ஆகவும் மற்றும் ஆன்லைன் வாயிலாக மேற்கொண்டால் ரூ.24 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் NEFT வாயிலாக ரூ.10,000க்குள் பணபரிவர்த்தனை மேற்கொண்டால் ரூ.2.25 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
அத்துடன் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு ரூ.4.75 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு 14.75 ரூபாய் எனவும், 2 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.24.75 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில் இந்த விலை உயர்வு பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.