அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

கோவாவில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓய்வூதியம்:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டது. அதன்படி 31% ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் 3% உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் 34% ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது உயர்ந்தபட்டுள்ள அகவிலைப்படி 2022 ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் கோவாவில் , அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவா மாநில அரசு ஊழியர்களுக்கு 60 வயதுக்கு பதிலாக 58 வயதில் பணி ஓய்வு வழங்கியுள்ளது. அதனால் மீதமுள்ள 2 ஆண்டுகளுக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் 2 ஆண்டுகளுக்கான ஊதியம் வழங்கப்பட தேவையில்லை எனவும், பென்சன் நிலுவைத் தொகையும் வழங்கப்பட தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை ஏற்காத ஊழியர்கள் வழக்கை மேல் முறையீடு செய்தனர்.

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூல் – பயணிகள் அவதி!

அப்போது அரசு ஊழியர்களுக்கு 60 வயது முதல் திருத்தப்பட்ட விகிதத்தில் பென்சனும், முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான பென்சன் நிலுவைத் தொகையும் நான்கு வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெற்றிருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு பென்ஷன் நிலுவைத் தொகை வழங்கக் கூடாது, பென்சன் வழங்கக்கூடாது என்பதும் நியாயமற்றது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து மற்ற மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!