தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை தேதி மாற்றம்!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பாதிப்பால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் முழுவதுமாக பாடங்களை நடத்தி முடிக்க முடியாமல் இருந்தது. இதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் மே 5ல் தொடங்கி மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
TN TET 2022 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதனை தொடர்ந்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு வருடமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத காரணத்தால் இந்த வருடம் கண்டிப்பான முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான அட்டவணையையும் வெளியிட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஜூன் மாதத்தில் திருத்த உள்ளனர். இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Exams Daily Mobile App Download
மேலும் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் போன்றவற்றின் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.