பிரசவமாக இருக்கும் போது ஆலியா ஷூட்டிங்கில் செய்த காரியம் – அர்ச்சனா பேட்டி!
ஆலியாவிற்கு தற்போது தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா பிரசவ நாளுக்கு 10 நாள் முன்பு வரைக்கும் சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் ஆலியா ஷூட்டிங்கின் போது என்னென்ன செய்வார் என்பதை அர்ச்சனா கூறும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆலியா மானசா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமாகி ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை ஆல்யா பெற்றார். சீரியலில் அறிமுகமான சில மாதங்களிலேயே ஆலியாவிற்கு பல சீரியல் வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. பின்பு, ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த சீரியலை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 தொடரிலும் ஆலியா நடிக்க ஒப்பந்தமானார்.
Exams Daily Mobile App Download
சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்ப்பமாக இருப்பதையும் சிறிதும் பொருட்படுத்தாமல் நாள் முழுக்க ஷூட்டிங்கிற்கு வந்து சென்று கொண்டிருந்தார். ஆலியா கர்ப்பமாக இருந்த போது எப்படி சமாளித்துக்கொண்டார் என்பதை அந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா கூறியுள்ளார். அதாவது ஷூட்டிங் இல்லாத போது முழுக்க முழுக்க நன்றாக தூங்கி ஓய்வெடுப்பார்.
பிறந்தநாள் விழாவை நிறுத்துவதற்காக உடம்பு சரியில்லாதது போல நடிக்கும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!
ஷூட்டிங் நேரத்தில் கொஞ்சம் கூட அசதியில்லாமல் நடிப்பார். துறுதுறுவென ஏதோ ஒன்றை செய்து கொண்டே இருப்பார். எப்படி ஆலியாவால் மட்டும் முடிகிறது என நாங்கள் வியந்து பார்த்திருக்கிறோம் என அர்ச்சனா அளிக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. தற்போது ஆலியாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜா ராணி தொடரில் கூட நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.