ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணத் தொகை உயர்வு – அரசின் முக்கிய முடிவு!
இந்தியாவில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பயனாளிகளுக்கான அகவிலை நிவாரண தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. பணவீக்கம் உயர்ந்தாலும், ஊழியர்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படாமல் இருக்க இந்த அகவிலைப்படி தொகை அவர்களுக்கு பயன் பெற்று வருகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டது.
TN TRB ஆசிரியர் காலியிடங்களுக்கான TET தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
இக்காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் உயர்வால் அகவிலைப்படியை மீண்டும் வழங்கவும் அதனை உயர்த்தவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்தது அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தி 31% ஆக வழங்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 3% உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் 34% ஆக அதிகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை, நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் போன்ற கோரிக்கைகளும் எழுத்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அரசு ஓய்வூதியதாரர்களின் வருங்கால வைப்பு நிதி பயனாளிகளுக்கான அகவிலை நிவாரண தொகையை 13 சதவீதம் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பயனாளிகள் A, B, C மற்றும் D குழுவிற்கு ரூ.3,000, ரூ.1,000, ரூ.750 மற்றும் ரூ.650 போன்ற கருணைத் தொகையை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1, 2022 முதல், அடிப்படை தொகையில் 360 சதவீதத்திலிருந்து 373 சதவீத கருணைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.