TN TRB ஆசிரியர் காலியிடங்களுக்கான TET தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியானதை தொடர்ந்து தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை TRB வெளியிட்டு உள்ளது.
முழு விவரங்கள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக , அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது நிலை சீராகி வருவதால், இந்த ஆண்டு அரசு தேர்வுகளுக்கான தேதிகள் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குரூப் 2, குரூப் 2A , குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதை தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு (TET Exam) அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் டெட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 26.04.2022 உடன் கால அவகாசம் நிறைவடைந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை TRB தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.trb.tn.nic.in -யில் வெளியிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் ஜூன் 17 ஆம் தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 28 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!
மேலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், தாள் 1 எழுதுவார்கள். பிஎட் முடித்தவர்கள், தாள் 2 எழுதுவார்கள். எழுத்துத் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் மற்றும் 150 MCQ-கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தாளில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பிரிவில் 30 வினாக்களும், மொழிப்பாடம் பிரிவில் 30 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்) வினாக்களும் கேட்கப்படும். மேலும் ஆங்கிலத்தில் 30 கேள்விகளும், கணிதத்தில் 30 கேள்விகளும், சுற்றுச்சூழல் கல்வியில் தலா 30 கேள்விகளும் என மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.