சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – காயம் காரணமாக விலகும் ரவீந்திர ஜடேஜா?
நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும், முன்னாள் கேப்டனுமான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலக உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள்:
குஜராத், லக்னோ என 2 புதிய அணிகளுடன் நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், முமபை இந்தியன்ஸ் என ரசிகர்கள் எதிர்பார்த்த டாப் அணிகள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன. பிளேஆப் வாய்ப்பினை மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே இழந்து விட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் போராடி வருகிறது. சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு பின்னர் அதன் கேப்டன் பொறுப்பில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகுவதாக அறிவித்தார். இதனால் மீண்டும் மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதன் பின்னர் சில வெற்றிகளையும் சென்னை அணி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் இந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிரான சிஎஸ்கேயின் ஆட்டத்தின் போது மேல் உடலில் ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஜடேஜா CSK இன் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக CSK அணி நிர்வாகம் ஜடேஜாவின் காயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வந்த நிலையில் அதில் பெரிதளவு நல்ல முன்னேற்றம் ஏற்படவில்லை. அடுத்த போட்டியில் மும்பையை சென்னை எதிர்கொள்ள உள்ள நிலையில், ஜடேஜாவின் இழப்பு அணிக்கு பேரிடியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
நடப்பு தொடரில் சிஎஸ்கே 11 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பினை பெற மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும், பின்னர் மற்ற அணிகளின் போட்டி முடிவுகளை பொறுத்தே அது உறுதி செய்யப்படும். தற்போதைய நிலவரத்தின் படி குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளேஆஃப் வாய்ப்பை பிடித்துள்ளது.