தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் திருவாரூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உதவி ஆணையர் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருவாரூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் தேர்ச்சி பெறாதவராகவும் இருக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் விண்ணப்பதாரர் 01.07.2021 அன்று நிலவரப்படி 18 வயது முதல் 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதில் BC/MBC/DNC உள்ளிட்ட பிரிவினராக இருப்பின் 34 வயதுடையவராக இருக்கலாம். இதே போல் SC/ST உள்ளிட்ட பிரிவினராக இருப்பின் 37 வயதுடையவராகவும் இருக்க வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் நல்ல உடற்தகுதியுடன் உள்ளவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதையடுத்து பணியில் சேருபவர்களுக்கு ரூ.15,700 முதல் 50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://hrce.tn.gov.in/
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
திருவாரூர் : உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 2, புதுத்தெரு, மயிலாடுதுறை சாலை, திருவாரூர் – 610001
கிருஷ்ணகிரி : உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, க.எண்: 1/304-4, 3-வது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி – 635002