தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி! அரசு விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கூடிய விரைவில் அமல்படுத்த இருப்பதாகவும், பஸ் இயக்கம் இருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதற்கு தகுந்த பதில் அளித்துள்ளார்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் மிக அதிகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது, இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களுக்கு விடாமல் எச்சரித்தனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் எனவும், அப்படி பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
Exams Daily Mobile App Download
கொரோனா தொற்றின் காரணமாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளாக போடப்பட்டன. இந்த தடுப்பூசியை கண்டிப்பான முறையில் போடப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி போடப்பட்டதால் பஸ்களில், கோவில்களில் ,மற்றும் பொது இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலையை தொடர்ந்து நான்காம் அலையாக கொரோனா பரவி வரும் நிலையில் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அதிகமாக பரவி கொண்டு வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகளை நம்ப வேணாம் என அறிவித்திருக்கிறார்.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – 12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
இது குறித்து , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அலட்சியமாக இருக்காமல், தமிழக அரசின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.