தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை – அரசு அறிவிப்பு!
மே தினத்தை முன்னிட்டு நாளை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகளும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட ஆயிரத்து 5410 க்கும் மேலான மதுபான கடைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. தமிழக அரசுக்கும் டாஸ்மாக் கடைகளின் மூலமாகவே அதிகமான வருமானம் கிடைத்து வருகிறது. மேலும், இந்த மதுபான கடைகளின் வாயிலாக மக்களுக்கு பல தரப்பிலான மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே தமிழக அரசுக்கு மதுபான கடைகளை மூட வேண்டும் என பல கோரிக்கைகள் வந்தபடியே தான் இருக்கின்றன.
சென்னை ஐஐடியில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – பொதுமக்கள் அச்சம்!
ஆனால் அதிகமான வருமானத்தை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் வாயிலாகத்தான் பெற்று கொண்டிருப்பதால் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறிப்பாக எந்த விளக்கமும் அளிப்பதில்லை. மேலும், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், வடலூர் ராமலிங்க நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய எட்டு தினங்களுக்கு மட்டுமே மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளை மூட இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இம்மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் மது கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையும் மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.