சென்னை ஐஐடியில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – பொதுமக்கள் அச்சம்!

0
சென்னை ஐஐடியில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்!
சென்னை ஐஐடியில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்!
சென்னை ஐஐடியில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மட்டும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தொட உள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஐஐடி மெட்ராஸ் அதிகாரிகள் சில விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு கடந்த மார்ச் 31ம் தேதி அன்று திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து வகையான தொழிற்துறைகளும் வணிக துறைகளும் இயல்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Wipro நிறுவனத்தில் 38,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 2023ம் நிதியாண்டில் திட்டம்! முழு விவரம் இதோ!

மேலும் ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த புதிய வகையான எக்ஸ்இ வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கால் தடம் பாதித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் தற்போது பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ஐஐடியில் மாணவர்களிடையே கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 196க்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக பரிசோதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் மாணவர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று ஐஐடி மெட்ராஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!