சன் டிவி தென்றல், கோலங்கள் சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கலர்ஸ் தமிழில் மீண்டும் ஒளிபரப்பு!
பிரபல தொலைக்காட்சியில் 90ஸ் கிட்ஸ்களில் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சீரியல்கள் தற்போது மீண்டும் மக்களை என்டர்டைன் செய்வதற்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
பிரபல சீரியல்
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி என்றாலே அது சன் டிவி தான். அப்பேற்பட்ட தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. ஆனாலும் சில சீரியல்கள் மட்டுமே மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பெற்றுள்ளது. அதாவது அன்று ஒளிபரப்பாகிய சீரியல்கள் அனைத்தும் பல நினைவுகளையும், வாழ்க்கை தத்துவங்களையும் கொண்டு சிறந்த கதைக்களத்தோடு இருக்கும்.
Exams Daily Mobile App Download
இப்போதும் பல சீரியல்கள் புது கதைக்களத்துடன் ஹிட் கொடுத்தாலும் பழைய தொடர்களுக்கு இணையாகாது. காலம் மாறினாலும் காவியம் மாறாது என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றும் பழைய தொடர்களுக்கு மவுசு உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் பிரபலமாகிய கோலம் மற்றும் தென்றல் என இரண்டு தொடர்களும் மீண்டும் மக்கள் மத்தியில் ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே! என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒளிபரப்பாக உள்ளது.
கர்ப்பமான முல்லை, மகிழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த திருப்பம்!
அட ஆமாங்க! மீண்டும் உங்கள தேடி உங்க வீட்டுக்கு கலர்ஸ் தொலைக்காட்சி வழியாக ஸ்ருதி மற்றும் தீபக் நடித்த ப்ளாக்பஸ்டர் தென்றல் தொடரும், தேவயானி நடிப்பில் ஹிட் கொடுத்த கோலம் சீரியலும் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும், சன் தொலைக்காட்சி சீரியல்கள் என்ற பெருமை கொண்ட இந்த இரண்டு சீரியலும் தற்போது மறுபடியும் வருகிறது என்று ரசிகர்கள் கொண்டாடினாலும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாவது ஒரு வகையான ப்ரோமோஷன்னா இருக்குமோ? என்ற சந்தேகமும் எழும்பித்தான் உள்ளது.