தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு – ஜூன் 3 வரை கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகளையும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை இணைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கூடுதல் பெட்டிகள்:
இந்தியாவில் மக்கள் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் நிலையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் முன்பதிவு அடிப்படையில் பயணிகள் பயணம் செய்ய ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஆன்லைன் வாயிலாக ஐஆர்சிடிசி கணக்கு தொடங்கி அதன் மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் எளிதாக வீட்டிலிருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
தமிழகத்தில் அதிதீவிரமாக பரவும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்வாழ்வுத்துறை செயலர் கடிதம்!
தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுபாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் படிப்படியாக முன்பதிவில்லாத ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை வர உள்ள நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிகாவும் கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் ராமேஸ்வரம் குருவாயூர் திருவனந்தபுரம் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் – நாகர்கோவில் விரைவு ரயில் (22668) மற்றும் திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா விரைவு ரயில் (16343) ஆகியவற்றில் ஏப்ரல் 21 முதல் மே 31 வரையும் அதே போல நாகர்கோவில் – கோயம்புத்தூர் விரைவு ரயிலில் ஏப்ரல் 22 முதல் ஜூன் 1 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் விரைவு ரயில் (16851) மற்றும் மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் (16852) ஏப்ரல் 21 முதல் ஜூன் 3 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.