தமிழகத்தில் அதிதீவிரமாக பரவும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்வாழ்வுத்துறை செயலர் கடிதம்!

0
தமிழகத்தில் அதிதீவிரமாக பரவும் கொரோனா - மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்வாழ்வுத்துறை செயலர் கடிதம்!
தமிழகத்தில் அதிதீவிரமாக பரவும் கொரோனா - மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்வாழ்வுத்துறை செயலர் கடிதம்!
தமிழகத்தில் அதிதீவிரமாக பரவும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்வாழ்வுத்துறை செயலர் கடிதம்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருவதால் தமிழக நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாநிலத்தில் உள்ள அனைத்து கலெக்டர்களுக்கும் கொரோனா பரவல் குறித்து கடிதம் எழுதி உள்ளார்.

மீண்டும் கொரோனா:

தமிழ் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

டெல்லிக்கு பறந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர் – காரணம் என்ன தெரியுமா?

இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சென்னையில் இருக்கும் ஐஐடி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்று தகவல் வந்தது. அதை தொடர்ந்து, இந்த 10 பேரில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில், அந்த நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறி இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா பரவல் குறித்து ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். மேலும் அந்த கடிதத்தில், கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், மேலும் பரிசோதனை முடியும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள், நெரிசலான பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!