அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து!
அந்தஸ்த்தில் முன்னிலையில் இருப்பவர்கள் பலரும் ரேஷன் பொருட்களை வாங்குவதே இல்லை. இதனால் தற்போது தொடர்ந்து 6 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கவில்லையெனில் ரேஷன் பொருட்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் பயன் பெரும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை செயலர் தகவல்!
இந்த ரேஷன் கார்டினை பயன்படுத்தி எந்த மாநிலத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம். PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்தஸ்தில் முன்னிலையில் இருப்பவர்களும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல நாட்களாக ரேஷன் பொருட்களை வாங்குவதும் இல்லை. இதனால் தகுதியான நபர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என அரசு ஒரு முடிவு செய்துள்ளது.
ExamsDaily Mobile App Download
அதாவது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் நீண்ட நாட்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவுக்காக கஷ்டப்படும் பொது மக்களுக்கு கூடுதலாக வசதிகளை வழங்கலாம் என அரசு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், கூடிய விரைவில் இந்த செயல்முறை தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.