இவரெல்லாம் ஒரு கணவரா? கோபி மீது கொலை வெறியில் இருக்கும் பாக்கியா! ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவை போலீசார் கைது செய்து ஒரு நாள் முழுக்க காவல் நிலையத்தில் வைத்திருந்த போது கூட கோபி உதவிக்கு வரவில்லை. இதனால், கோவத்தில் பாக்கியா கோபியை கண்டபடி திட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு எப்போது தான் அனைத்து உண்மைகளும் தெரியவருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாக்கியா தான் உணவில் ஏதோ கலந்துவிட்டார் என நினைத்து பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கூட்டி செல்கின்றனர்.
ExamsDaily Mobile App Download
பாக்கியா சமைத்து கொடுத்த பின்பும் கூட உணவில் நஞ்சை கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ராதிகாவையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக ராதிகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பாக்கியாவால் தான் காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால் பாக்கியா மீது ராதிகா கொலைவெறியில் இருக்கிறார். இதனால் பாக்கியாவை ராதிகா பயங்கSivaரமாக திட்டிவிடுகிறார். பாக்கியாவும் மிகவும் பயந்துவிடுகிறார்.
நடிகை ஆலியா போலவே ஆச்சு அசலாக இருக்கும் குழந்தை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
பாக்கியாவை எப்படியாவது காவல் நிலையத்திலிருந்து கூட்டி வந்துவிட வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால், கோபி யாரின் காலையும் அட்டென்ட் செய்யவே இல்லை. இதனால் குடும்பமே கோபி மீது கொலை வெறியில் இருக்கிறது. ராதிகாவை மட்டும் மறைமுகமாக காவல் நிலையத்தில் வந்து கோபி அழைத்து செல்கிறார். பின்பு, எதுவுமே நடைபெறாதது போல வீட்டிற்கு வருகிறார். உடனே, கோவத்தில் ராதிகா நீங்களெல்லாம் ஒரு கணவரா, மனைவி ஆபத்தில் சிக்கியிருக்கும் போது கூட உதவிக்கு வரவில்லை என கோபியை கண்டபடி திட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.