தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல், அரசாணை வெளியீடு? அரசு சார்பு செயலாளர் விளக்கம்!
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு கடந்த ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தற்போது வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி விரைவில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் செயலாற்றி வரும் ஊழியர்களுக்கு என்று அரசு தரப்பில் இருந்து பல வித சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக இருந்து வருவது தான், ஓய்வூதிய திட்டம். அதில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த திட்டத்தின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் தாங்கள் பணியில் இருக்கும் போது அவர்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவை ஓய்வு பெற்றதும் ஓய்வூதிய தொகையாக அளிக்கப்படும். ஆனால், இந்த திட்டத்திற்கு மாற்றாக கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய பங்களிப்பு திட்டம் எனப்படும் CPS திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
CSCR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய தொகை என்பது கிடையாது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் தமிழக அரசிற்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்தி, அரசு பணியாளர்களின் பல வருட கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியது. அந்த கடிதத்தின் பெயரில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவது குறித்தான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டது.
Skill India ‘அப்ரண்டிஸ்ஷிப் மேளா’ நாளை (ஏப்.21) தொடக்கம் – 100000+ பேருக்கு வேலைவாய்ப்பு!
தமிழக அரசு பணியாளர்கள் சங்கத்தின் கடிதத்திற்கு பதில் தற்போது அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 01.04.2003 என்ற தேதியிலோ அல்லது அதற்கு பிறகோ முறையான அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புதிய ஓய்வு திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு திட்டத்தினை செயலாற்றுவது குறித்து அரசிற்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அரசு அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு ஓய்வூதிய திட்டத்திற்குரிய அரசாணைகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பு செயலாளர் தமிழக அரசுப் பணியாளர்கள் சங்கம் சமர்ப்பித்த கடிதத்திற்கு இவ்வாறாக பதில் அளித்துள்ளார்.