‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அஞ்சலிக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சின்னத்திரை உலகில் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் அறிமுகம் ஆன கண்மணி தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட்,இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இவை அனைத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
கண்மணி மனோகரன்:
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் கண்மணி மனோகரன். இவரது நடிப்பு ஆரம்பத்தில் கதைக்கு ஒட்டாமல் இருப்பதாக கருத்துக்கள் வந்த நிலையில், போகப்போக கதையின் தன்மையை புரிந்து கொண்டு மிகவும் அனுபவம் வாய்ந்த நடிகைகளை போல் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் கண்மணிக்கு அதிக ரசிகர்கள் சேரத்தொடங்கினார்கள். கண்மணி சுவீட்டி என்ற செல்ல பெயரால் தான் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை கண்டுபிடிக்கும் ராதிகா – வசமாக சிக்கிக் கொண்ட கோபி!
முதலில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினாலும், நாளடைவில் கண்ணம்மாவை ஆதரிக்கும், அவரது முயற்சிக்கு நம்பிக்கை அளிக்கும் கதாபாத்திரமாக மாறி விட்டார். மேலும்,அகிலன் அஞ்சலி ஜோடிக்கும் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார்கள். கண்மணி சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இதன் மூலம் அவரது திறமைகள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படுகிறது. அதேபோல் கண்மணி அடிக்கடி விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி வருவார். அந்த வகையில் தற்போது பாவாடை தாவணி அணிந்து கோயிலுக்கு செல்வது போல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் கண்மணி திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.