பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை கண்டுபிடிக்கும் ராதிகா – வசமாக சிக்கிக் கொண்ட கோபி!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்து வரும் அனைத்து தில்லுமுல்லு செயல்களும் விரைவில் அனைவருக்கும் தெரிய வரும் சூழல் நெருங்கி விட்டது. இதனால் கதைக்களம் இன்னும் சூடு பிடிக்கும் வகையில் உள்ளது.
சிக்கிக்கொள்ளும் கோபி:
பாக்கியா தனது கணவர் தன்னிடம் முறையாக நடந்து கொள்ள விட்டாலும், தனக்கு துரோகம் செய்வார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு நம்பிக்கை வைத்திருகிறார். அதை பற்றி ஒரு சில முறை செல்வி எடுத்து சொல்லியும் கூட கேட்காமல் செல்வியிடம் தான் கோபித்துக் கொண்டார். தன்னிடம் பாசமாக இல்லையென்றால் என்ன நம் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் பாசமாக இருப்பது போதும் என்று நினைக்கிறார்.
கல்யாணம் பண்ணி 25 வருடங்கள் களைத்து கூட இன்னும் மனைவியை புரிந்து கொள்ள முடியாத, அவரை மதிக்க தெரியாத கோபியின் மனநிலை மிகவும் மோசமாக தான் இந்த கதையில் சித்தரிக்கப்படுகிறது. பாக்கியா கதாபாத்திரத்தையும் இந்த அளவிற்கு அப்பாவியாக காட்டக்கூடாது என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ராதிகா அப்படி இல்லை புத்திசாலி, கோபி பாக்கியாவை பற்றி பேசும் போது மட்டுமே இவ்வாறு நடந்து கொள்வதை புரிந்து கொள்கிறார்.
இதனால் கோபி மீது ராதிகாவிற்கு சந்தேகம் வருகிறது. இதனால் கோபியிடம் நேரடியாக கேள்வியும் கேட்டு விடுகிறார். கோபி இதற்கு மழுப்பலாக பதில் சொல்லி முடித்து விடுகிறார். ஆனால் இந்த சமையல் ஆர்டர் விஷயத்தில் ஏதாவது குளறு படி செய்ய கோபி நினைத்து வருகிறார். அதில் தானே வசமாக ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளப்போகிறார். இதனால் கதையில் அடுத்து வரப்போகும் திருப்பங்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.