ரயில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை வெளியிட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக தாம்பரம் இருந்து நாகர்கோவில் வரையிலும் தென்காசி வழியாக செல்லும் திருநெல்வேலி யிலிருந்து தாம்பரம் வரையில் ரயில் நிலையங்களுக்கு இடையிலான கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக முன் பதிவுகளுடன் கூடிய ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரயில்வே நிர்வாகத்திடம் மக்கள் பழைய முன்பதிவில்லா பயணம் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்தியோதயா ரயில் மீண்டும் முன்பதிவு இல்லாத ரயில் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு – அரசு அதிரடி அறிவிப்பு!
அதன்படி,தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை அதிவேக ரயில் (06005), ஏப்ரல் 22 முதல் ஜூன் 24 வரை வெள்ளிக்கிழமையிலும் தாம்பரத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றையும் மற்றும் நாகர்கோவில் முதல் தாம்பரம் வரை அதிவேக ரயில் (06006),ஏப்ரல் 24 முதல் ஜூன் 26 வரை ஞாயிற்றுக்கிழமையில் நாகர்கோவிலிலிருந்து மாலை 4.15 க்கு புறப்பட்டு விடியற்காலை 4.10 மணி அளவில் தாம்பரத்துக்கு சென்று அடையும்.
திருநெல்வேலி முதல் தாம்பரம் வரை அதிவேக ரயில் (06004), ஏப்ரல் 17 ம் தேதி முதல் ஜூன் 26 ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமையில் திருநெல்வேலியிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30க்கு தாம்பரம் வந்து அடையும்.மற்றும் தாம்பரம் முதல் திருநெல்வேலி அதிவேக ரயில்வே (06003), ஏப்ரல் 18 முதல் ஜூன் 20ம் தேதி செவ்வாய்க்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20 இருந்து மறுநாள் காலை 10.25 க்கு திருநெல்விக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.