“விஜய் டெலிவிஷன் அவார்ட்” நிகழ்ச்சியில் சிறந்த பெண் தொகுப்பாளராக பிரியங்காவிற்கு விருது – கிளம்பிய சர்ச்சை!
விஜய் டிவியில் “விஜய் டெலிவிஷன் அவார்ட்” நிகழ்ச்சியில் சிறந்த பெண் தொகுப்பாளர் என்ற விருது பிரியங்காவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அது குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது.
தொகுப்பாளினி பிரியங்கா:
சின்னத்திரையில் டாப் சேனல்களில் ஒன்று தான் விஜய் டிவி. இதில் புதுமுகங்களாக பலர் அறிமுகமாகி சினிமாவில் ஸ்டாராக கலக்கி வருகின்றனர். திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கொடுப்பதில் விஜய் டிவியை மிஞ்ச முடியாது. அந்த வகையில் விஜய் டிவி நட்சத்திரங்களையும், தொகுப்பாளர்களையும், சீரியல் குழுக்களையும் பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் திறமைசாலிகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தில் அரங்கேறும் இரண்டு திருமணங்கள் – ப்ரோமோ ரிலீஸ்!
அந்த வகையில் இந்த ஆண்டு ஏகப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. விஜய் டிவி ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன் பிரிவில் பல்வேறு விருதுகள் வழங்கி, கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். சீரியல் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், என பலரும் விருதுகளை பெற்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த பெண் தொகுப்பாளர் என்ற விருது பிரியங்காவிற்கு வழங்கப்பட்டது. அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் கிளம்பியது.
விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜி மனைவி திடீர் பேட்டி – குற்றச்சாட்டுகளை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்!
அதற்கு காரணம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தது தான். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் களமிறங்கிய அவருக்கு இரண்டாம் பரிசு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடைசி நாள் வரை அவர் வீட்டிற்குள் இருந்தார். இவர் அடித்த லூட்டிகள் அதிக பேரால் ரசிக்கப்பட்டாலும் நரியங்கா, சகுனி, என பிரியங்காவை வெறுப்பவர்களும் உண்டு. அதனால் அவர் பல நாட்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவர் தொகுத்து வழங்கும் வேலையை செய்யவில்லை. இப்படி வருடம் முழுவதும் பல்வேறு காரணங்களால் பிஸியாக இருந்த பிரியங்கா, எப்படி சிறந்த ஆங்கரிங்க்கான விருதை பெறுவார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.