ஏப்ரல் 5 முதல் விளையாட்டு விடுதிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலை பாதிப்புகள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து விளையாட்டு விடுதிகளையும் ஏப்ரல் 5 முதல் மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
விளையாட்டு விடுதிகள்
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக காணப்பட்டு வரும் கொரோனா பேரலை தொற்று பாதிப்புகள் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று நிமித்தமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இப்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட மற்ற விதிமுறைகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
இப்படி இருக்க உத்திர பிரதேச மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில் அனைத்து விளையாட்டு விடுதிகளையும் ஏப்ரல் 5 முதல் மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில விளையாட்டுத் துறை இயக்குநர் ஆர்.பி.சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா விதிமுறையை பின்பற்றும் வீரர்கள் ஏப்ரல் 5 முதல் அந்தந்த விடுதிகளில் சேர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்காக வாய்ப்புள்ள புதிய வீரர்களுக்கான பயிற்சி முகாம்கள் மே 11 முதல் 25 வரை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயிற்சி முகாம்களில் ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், மல்யுத்தம், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கபடி, கூடைப்பந்து, வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் ஹேண்ட்பால் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.