TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலமாக நிரப்படும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பல காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் TNPSC தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு முடிவுகள்:
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகி வருகிறது. தற்போது குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வர்கள் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசுக்கு பரிந்துரை!
மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் கடினமாக படித்து வரும் நிலையில் TNPSC நடத்தும் தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிட புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த செய்தி குறிப்பில், TNPSC நடத்தும் போட்டித்தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடும் வகையில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நீங்கலாக, இதர அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.அதன்படி, விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும்.
இது குறித்த தகவல் தேர்வாணையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை ஒருமுறை பதிவின் (ஒடிஎம்) மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு சான்றிதழ் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ, ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் நாளுக்கு 2 தினங்களுக்கு முன்புவரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும், மறு பதிவேற்றம் செய்யவும் அனுமதிக்கப்படும். உரிய முறையில் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையிலேயே இருக்கும். எனவே, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம்செய்வதில் அதிக அக்கறையுட னும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகள் அல்லது 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.