தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் வழக்கம் போல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின் 4ம் அலை பரவ தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அண்டை நாடான சீனா மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தொற்று அதிகம் பரவியுள்ள 10 நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்கா, தீவு நாடான சமோவா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கொரோனா நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் இருந்தால் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கும். அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.