தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – மார்ச் 24 முகாம் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வருகிற மார்ச் 24ம் தேதி அன்று தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தேவையான தகுதிகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பயன்பெற்று உள்ளனர்.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார் துறைகள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வருகிற மார்ச் 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும் இதில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. இம்முகாமில் தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஒசூா் மற்றும் சென்னையை சார்ந்த நிறுவனங்கள் பங்கு பெறுகிறது. இந்த நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். அத்துடன் ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், மருத்துவம் சார்ந்த படிப்புகள் செவிலிய உதவியாளர், மருந்தாளுநர், தையல் பயிற்சி உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். இதன் மூலமாக தங்களுக்கு தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் 04342-296 188 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.