TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த 14ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்னும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 22 நாட்கள் உள்ளது. இதனை பயன்படுத்தி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
டெட்:
தமிழகத்தில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 5831 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள குரூப்2,2A தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிக தேர்வர்கள் எதிர்பார்க்க கூடிய குரூப்4&VAO தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகளை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2012 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!
இதுவரை 5 முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 25,000 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான டெட் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 7ம் தேதி அறிவிப்பு வெளியானது. மேலும் 14ம் தேதி முதல் டெட் தேர்வு விண்ணப்பப் பதிவும் தொடங்கியுள்ளது. ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் இத்தேர்வு விண்ணப்பிக்கலாம். இந்த டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. இதில் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பப் பதிவுகள் நடைபெற்று வருகிறது. விண்ணப்பிப்போர் கட்டணமாக 500 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும். தேர்வு விண்ணப்பிக்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் இதனை பயன்படுத்தி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நியமனத் தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.