CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
இந்தியாவில், CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் பருவத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் முதல் பருவத்தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீட்டிற்க்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை CBSE வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் மதிப்பெண் மறுமதிப்பீடுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
முழு விவரம்:
மத்திய கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத் தேர்வுக்கு பதிலாக இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. CBSE 10 ஆம் வகுப்புக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வரும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து வந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பின் பலனாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சனிக்கிழமை அன்று (மார்ச் 19, 2022) CBSE 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு!
ஆன்லைனில் வெளியிடப்பட்ட முடிவுகளை மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் CBSE, cbse.gov.in அல்லது cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை உடனடியாக சரிபார்க்க முடியும். மேலும் CBSE 12ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் cbse.gov.in இணையதளத்தில் மறுமதிப்பீட்டிற்க்கு விண்ணப்பிக்க மார்ச் 31, 2022 வரை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பள்ளிகள் CBSE- cbse.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட வேண்டும்
- இணையதளத்தில், ‘தீர்மானத்திற்கான பள்ளிக் கோரிக்கை சமர்ப்பிப்பு (டெர்ம்-I தேர்வு முடிவு-2022)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தேவையான உள்நுழைவு சான்றுகளை நிரப்பவும்
- தகவலை உள்ளிட்டு CBSE முடிவு மறுமதிப்பீட்டு கோரிக்கைகளுக்கு விண்ணப்பிக்கவும்
- உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கி, எதிர்காலக் குறிப்புக்காக PRINT எடுக்கவும்
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான 2 ஆம் பருவத்துக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி, மே 24 ஆம் தேதி முடிவடைகிறது. 12 ஆம் வகுப்புகளுக்கான 2 பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 15 ஆம் தேதி புதன்கிழமை நிறைவடைகின்றன என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.