ஏப்ரல் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு!

0
ஏப்ரல் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு!
ஏப்ரல் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு!
ஏப்ரல் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (BMC) உட்பட்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

மும்பையில் உள்ள பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்று காவல்துறை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவின் படி, சமூக இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவது, ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவது, இசை கச்சேரிகள் நடத்துவது, வெடி பொருட்களை வெடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

IPL சீசன் 15: CSK ரசிகர்கள் கவனத்திற்கு – ஆடும் XI அணியில் சிறந்த மாற்று வீரர்கள் இவர்கள் தான்?

அதே நேரத்தில் திருமணங்கள், இறப்பு நிகழ்வுகள், கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மகாராஷ்டிரா காவல்துறை சட்டம் 1951ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் ஏப்ரல் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இக்கட்டுப்பாடுகளில் இருந்து திரையரங்குகள், மால்கள், பொது பொழுதுபோக்கு இடங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்போது பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதிகளில் காவல்துறையின் அனுமதி பெற்ற ஊர்வலங்களை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் காவல்துறை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், பிரஹன்மும்பை அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை பாரா கிளைடிங், பலூன்கள் மற்றும் சத்தமுள்ள வெடிகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ள எந்தவொரு தடையை மீறுபவர்கள் மீது, CrCP பிரிவு 188ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!