திருச்சி மாவட்டத்தில் நாளை (மார்ச் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள அறந்தாங்கி பகுதிக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(மார்ச் 12) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும்.
இந்த நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி மற்றும் திருமயம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (மார்ச் 12) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் க. தனபால், கா. ராமநாதன் ஆகியோர் கூறியுள்ளனர்.
EPFO மாதம் ரூ.15000க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம்!
திருச்சி மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், அறந்தாங்கி நகரம், அழியாநிலை, சிலட்டுர், சிதம்பர விடுதி, குரும்பூர், மறமடக்கி, ரெத்தினக்கோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சத்தி, குண்டகவயல், நாகுடி, அத்தாணி, தொண்டைமானேந்தல், மேல்மங்கலம்,பெருங்காடு, மேல்பட்டி, திணையக்குடி, கட்டு மாவடி, வல்லவாரி, அரசர்குலம், சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களிலும், திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமசந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், வாரியப்பட்டி, மேலூர், அம்மன் பட்டி, அரசம்பட்டி, வி. லட்சுமிபுரம் விராச்சிலை, பெல் வளாகம் ஆகிய இடங்களிலும், பொன்னமராவதி ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.