EPFO மாதம் ரூ.15000க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம்!

0
EPFO மாதம் ரூ.15000க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய திட்டம்!
EPFO மாதம் ரூ.15000க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய திட்டம்!
EPFO மாதம் ரூ.15000க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம்!

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இதில் தற்போது பிடித்தம் செய்யப்படும் அளவீட்டை உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO புதிய திட்டம்

இந்தியாவில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இந்த தொகையுடன் அரசு சார்பாகவும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்படுகிறது. இந்த தொகைக்கு வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் நிறைவடையும் போது வழங்கப்படுகிறது. இந்த தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவத்தேர்வுகள் ஏப்.26 முதல் தொடக்கம்!

தற்போது அரசு அலுவலகங்களில் வகைப்படுத்தப்பட்ட துறையில் பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.15000க்கும் மேல் பெற்றால் அவர்கள் EPS-95 கீழ் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கிடையில் ஊழியர்கள் அதிகமான தொகையை முதலீடு செய்து அதிகமான லாபத்தை பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது அடிப்படை சம்பளம் வாங்கும் ஊழியர்களும் குறைவான சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரே அளவிலான தொகை பிடித்தம் செய்யப்படும் நடைமுறை உள்ளது.

இன்று முதல் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு!

இந்த நிலையில் 15000க்கு மேல் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய திட்டம் குறித்து மார்ச் 11 மற்றும் 12ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் தற்போது 15000 ரூபாய்க்கு 8.33% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக PF தொகை பிடித்தம் செய்வது 6400 ரூபாயிலிருந்து 15000 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!