கலர்ஸ் தமிழ் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகை செய்த காரியம் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலின் கதாநாயகி ஹேமாபிந்து செய்த செயல் ஒன்று அவரது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகை:
தமிழ் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய செயல் கூட ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கும். அது நல்ல காரியம் என்றால் அதை ரசிகர்கள் கொண்டிடுவார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ தொடரின் கதாநாயகி செய்த ஒரு செயல் அவரின் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அந்த சீரியலில் ஹேமாபிந்து என்பவர் நடித்து வருகிறார்.
கண்ணம்மாவின் திருமண ஆல்பத்தை பார்த்து திகைத்துப்போன லட்சுமி – உண்மைகள் தெரிய வருமா?
அந்த சீரியல் இல்லதரிசிகளின் கதையை மையமாக கொண்டு இருப்பதால் பல பெண்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு அதிக ஃபாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் வீடியோ இளைஞர்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கும், அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒரு நடிகையாக இருந்து அவர் இந்த அளவிற்கு சிறப்பானவராக இருப்பதால் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.
முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் – விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!
சீரியலில் ஐஸ்வர்யா என்கிற குழந்தைக்கு அம்மாவாக நடித்து வரும் அவர் பல குழந்தைகளின் அம்மா பாசத்தையும் இவர் பெற்றுள்ளார். தற்போது ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்காக ஒரு விஷயத்தை செய்துள்ளார். இது அந்த குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. அதாவது அவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அந்த குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.