ஜீ தமிழ் “சத்யா” சீரியலில் இருந்து விலகும் அமுல் பேபி விஷ்ணு? ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழில் பிரபலமான சீரியல் ஆன “சத்யா” சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஜய், கலர்ஸ் தமிழ் டிவியில் புதிய சீரியலில் நடிக்க இருப்பதால் அந்த சீரியலை விட்டு விலகி உள்ளாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஷ்ணு விஷால்:
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதனால் பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் 2019 ஆம் ஆண்டு மாறுபட்ட கதைக்களத்துடன் தொடங்கப்பட்ட சீரியல் தான் சத்யா. இந்த சீரியலில் விஷ்ணு மற்றும் ஆயிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த தொடர் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பாக்கியாவிடம் வீட்டு செலவு பற்றி சண்டை போட்ட கோபி, நகைகளை கொடுத்த ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!
இருந்தாலும் சமீபத்தில் இந்த சீரியல் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இந்த சீரியல் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. ரவுடி பேபி, அமுல் பேபி என இந்த சீரியலில் வரும் காதல் காட்சிகள் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த சீரியல் கதாநாயகர் நடிகர் விஷ்ணு இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது விஷ்ணு தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.
அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ரட்சிதா நடிக்கிறார். அந்த சீரியலுக்கு “இது சொல்ல மறந்த கதை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த சீரியல் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டுள்ளது. மார்ச் 7 ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் சத்யா சீரியலில் இருந்து விஷ்ணு வெளியேறி புதிய சீரியலில் நடிக்கிறாரா? அல்லது இரண்டிலுமே நடிக்கப் போகிறாரா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.