TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
தமிழகத்தில் TNPSC தேர்வு எழுதும் அனைத்து தேர்வுகளும் தங்களுடைய ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்குடன், ஆதார் எண்ணை இன்னும் 3 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஆதார் இணைப்பது கட்டாயம்:
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா எதிரொலியாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது நோய் தொற்று குறைந்து வருவதால் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 18ம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த குரூப் 2, குரூப் 2A தேர்வு மே 21ம் தேதி நடக்க உள்ளன. இந்த அறிவிப்பை தொடர்ந்து TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மார்ச் 10 கடைசி நாள்!
அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதமாக, TNPSC தேர்வு எழுதுபவர்களில், ஒரு முறை நிரந்தரப் பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை (மார்ச் 28 ஆம் தேதி) இன்னும் 3 நாட்களுக்குள் இணையத்தில் தவறாமல் இணைக்க வேண்டும்
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எதையெல்லாம் அப்டேட் செய்யலாம்? முழு விவரங்கள் இதோ!
மேலும் எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப் பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டு உள்ளது. இந்த குறித்து கூடுதல் விபரங்கள் அறிய 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது [email protected] /[email protected] மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.