அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எதையெல்லாம் அப்டேட் செய்யலாம்? முழு விவரங்கள் இதோ!
நாட்டில் முக்கிய ஆவணமாக விளங்கும் ரேஷன் கார்டை நாம் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். இந்த நிலையில் நாம் என்னென்ன விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பொது விநியோக திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாகவும், இருப்பிட சான்றாகவும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. புதிதாக திருமணமானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். முதலில் புதிய ரேஷன் கார்டு பெற தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில் புதிய ரேஷன் கார்டு பெறவும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் நாளை (பிப்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அது மட்டுமல்லாமல் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டில் அனைத்து விவரங்களையும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். கார்டில் உள்ள விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதாவது பெயர் மாற்றம், மொபைல் எண், முகவரி போன்ற மாற்றங்களை எளிதாக ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். அதன் படி ரேஷன் அட்டைதாரர்கள் இணையதளம் வாயிலாக மாற்றங்களை செய்யலாம். இந்த இணையதள முகவரி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். தமிழக மக்கள் https://tnpds.gov.in/ என்ற உணவு வழங்கல்துறையின் அதிகார்பூர்வ இணையதளம் வாயிலாக ரேஷன் கார்டை அப்டேட் செய்யலாம்.
உக்ரைன், ரஷ்யா இடையே 2வது நாளாக தொடரும் போர் – 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு!
இந்த ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்தல் புதிய உறுப்பினர்களை சேர்க்க உரிய ஆவணங்கள் இருப்பது அவசியமாகும். அதில் ஆதார் அட்டையை ஆவணமாக சமர்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம். மேலும் குழந்தைகளின் பெயரை சேர்க்க பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு அவசியமாகும். அதனால் குழந்தைகளை ரேஷன் அட்டையில் பெயரை சேர்க்க முதலில் அவர்களுக்கு ஆதார் அட்டை பெற வேண்டும்.